கலிப்சோ ரயில் சேவை நானுஓயாவிலிருந்து ஆரம்பம்.

Aarani Editor
1 Min Read
New Train Service

கலிப்சோ எனப்படும் விசேட பார்வை வசதிகள் கொண்ட தொடருந்து சேவையினை ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதரபுகையிரத நிலையங்களுக்கு இடையே இன்று முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த தொடருந்து காலை 8:10 மணிக்கு நானுஓயாவிலிருந்து பயணிக்க உள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் தேவையைக் கருத்தில் கொண்டு நானுஓயா புகையிரத நிலைய வளாகத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து தெமோதர நோக்கி பயணிக்கும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணியிடமிருந்தும் 10,000 ரூபா அறவிடப்படுவதுடன், இயற்கை அழகை ரசிக்கும் வகையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சுற்றுலா ரயில் பெட்டிகளாக புனரமைக்கப்பட்டுள்ளன.

மேலும் உணவு, இசை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டுள்ளது.

தற்போது நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதுடன், மலையக தொடருந்து பாதையின் அதிசயங்களை பார்த்து இரசிக்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வமாக உள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *