தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஊதிய அதிகரிப்புக்கு அமைச்சரவை அங்கீகாரம்.

Aarani Editor
0 Min Read

தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 2025 ஏப்ரல் 01 முதல் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ஆக உயர்த்தும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரத்தை தொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார்.

அமைச்சரவை பத்திரத்தின்படி, தனியார் துறை ஊழியர்களின் தினசரி குறைந்தபட்ச ஊதியம் 700 ரூபாவிலிருந்து 1,080 ரூபாவாக உயர்த்தப்படும்.

மேலும், தனியார் துறை ஊழியர்களின் மாதாந்திர குறைந்தபட்ச ஊதியத்தை 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக உயர்த்தவும் அமைச்சரவைப் பத்திரம் முன்மொழிந்துள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மே மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என தொழில் அமைச்சு கூறியுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *