முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 8 பேர் கைது

Aarani Editor
1 Min Read
Mullaitivu

முல்லைத்தீவு, கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழில்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளதாகவும் இதனை கட்டுப்படுத்த உரிய திணைக்களங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

குறித்த நபர்கள், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

அதேபோன்று நேற்று இரவு சட்டவிரோத தொழிலில் ஈடுபட்ட மீனவர்களின் மீன்பிடி படகு ஒன்று சுமார் 450 கிலோ மீன்களுடன் இன்று அதிகாலை கரைக்கு கொண்டுவரப்பட்டு இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த இருவரும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்கள் எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *