யாழ்ப்பாணம் – வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட 4 உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று சந்தித்தார்.
இதன்போது தேர்தல் வியூகங்கள் மற்றும் சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சிந்தனைகளும் நிலைப்பாடுகளும் பிழைத்தது கிடையாது என்பதை நீண்ட கால வரலாறு உறுதிப்படுத்தி வருகின்றதெனவும், அவை சரியான முறையில் மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
அத்துடன் உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் மக்களுக்கு கட்சியின் நிலைப்பாடுகளை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தினார்.



link: https://namathulk.com/