குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார் கெஹெலிய.

Aarani Editor
1 Min Read
Keheliya Rambukwella

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானார்.

தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய ரம்புக்வெல்ல திணைக்களத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக கெஹெலிய ரம்புக்வெல்ல 07 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார், அதன் பிறகு அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இரண்டு மூத்த அரசு அதிகாரிகளின் உதவியுடன் போலி ஆவணங்களை உருவாக்கி ஒரு மருந்து நிறுவனம் 22,500 தரமற்ற இம்யூன் குளோபுலின் தடுப்பூசி குப்பிகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து குற்றப்புலனாய்வு பரிவினர் விசாரணையைத் தொடங்கிய பின்னர், அவர் மற்றும் பல சுகாதார அமைச்சின் அதிகாரிகள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், தரமற்ற மருந்தை இறக்குமதி செய்வதன் மூலம் 130 மில்லியன் ரூபா நிதி மோசடி நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *