பிள்ளையானை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி

Aarani Editor
1 Min Read
கைது

ஒருவரை கடத்தி காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றையதினம் (08) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாதன் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பாக பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி, கொழும்பு 7இல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்குபற்றி இருந்தபோது, பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரன் கடத்தப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளையான் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவரை 72 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *