முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வாவை ஏப்ரல் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட மேலும் மூன்று பேரை ஏப்ரல் 21 வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கிரிபத்கொட பகுதியில் அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்தை போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக, பெலவத்தை, பத்தரமுல்ல பகுதியில் மெர்வின் சில்வாவை குற்றப் புலனாய்வுத் துறை சமீபத்தில் கைது செய்தது.
தற்போது தலைமறைவாக உள்ள பிரசன்ன ரணவீர மற்றும் மில்ரோய் பெரேரா ஆகியோரைக் கைது செய்ய மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
Link: https://namathulk.com/