யாழ்ப்பாணக் கடலை ஆக்கிரமிக்கும் சீனக் கடலட்டை பண்ணைகள் தொடர்பில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பேச்சாளர் அ.அன்னராசா தெரிவித்ததாக வெளியான செய்தி தொடர்பில் தெளிவுப்படுத்தல் அறிக்கையொன்றினை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ளது.
11ஆம் திகதி வேலணைக்கு வரும் பிரதமர் ஹரிணி அமரசூரியவின் கவனத்துக்கும் இந்த விடயத்தைக் கொண்டு செல்வதற்கு முயற்சித்துவருவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளளது.
இவை தொடர்பில் முற்கூட்டியே அறிந்துகொண்ட ஆளுநர் செயலகம் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் பிரதமர் வருவதற்கு முன்பாக, கடல் அட்டைப் பண்ணைகளுக்காக கடல் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்ரிக் தடுப்பு வேலிகள் அவசர அவசரமாக அகற்றப்படுகின்றன’ என அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதைப்போன்று ‘ஆளுநர் செயலகம் எந்தவொரு தகவல்களையும் வழங்கவில்லை’ என ஆளுநர் செயலகம் கூறியுள்ளது.
அத்துடன் இந்த விடயத்துக்கும் ஆளுநர் செயலகத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என்பதையும் ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள மறுப்பரிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/