கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகில் கைத்துப்பாக்கி, மகசின் மற்றும் 12 தோட்டாக்களை வைத்திருந்த ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
41 வயதுடைய குறித்த நபர், விமான நிலைய புறப்படு முனையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது கைது செய்யப்பட்டார்.
ரத்மலானைச் சேர்ந்த சந்தேக நபர், 2018 டிசம்பரில் நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பாக கல்கிசை பொலிசாரால், முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணைகளுக்காக அவர் பேலியகொடை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
link: https://namathulk.com/