வட மாகாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை நிறுவுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக, இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் சனத் ஜெயசூர்ய மற்றும் விளையாட்டு அமைச்சர் சுனில் கமகே ஆகியோர் இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தனர்.
முன்மொழியப்பட்ட மைதானத்திற்காக ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு கையகப்படுத்தப்பட்டுள்ள மண்டைத்தீவில் உள்ள ஒரு நிலத்தை இருவரும் ஆய்வு செய்தனர்.
இந்த விஜயத்தின் போது, அதிகாரிகள் அந்த இடத்தின் சாத்தியக்கூறுகளை மதிப்பீடு செய்து, வடக்குப் பிராந்தியத்தில் கிரிக்கெட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வசதியின் மேம்பாட்டுக்கான ஆரம்பத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடினர்.
தற்போது தேசிய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், இலங்கை கிரிக்கெட் உயர் செயல்திறன் மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றும் சனத் ஜெயசூர்ய, கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரிடம் மைதானத்தின் கட்டுமானப் பணிகளுக்கு நிதி உதவி கோரியமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/