வேளாண்மை விதைப்பை தொடர்ந்து காடுகளை நோக்கி யானை கூட்டத்தை திருப்ப திட்டம் முன்னெடுப்பு.

Aarani Editor
1 Min Read
Elephant Herd

வேளாண்மை நடவடிக்கைகளுக்காக மீண்டும் உழவு வேலைகள் ஆரம்பித்துள்ள நிலையில் வயல்வெளிகளில் நடமாடுகின்ற யானைக் கூட்டத்தை அகற்றும் நடவடிக்கைகளை வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் பொலிசாருடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

வேளாண்மை விதைப்பை தொடர்ந்து யானைகளை காடுகளை நோக்கி திருப்பும் நடவடிக்கைகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது சுமார் 200 க்கும் அதிகமான யானைகள் பட்டி பட்டியாக வருகை தருவதுடன் பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றன.

அண்மைக்காலமாக இப்பிரதேசத்தில் கூட்டமாக ஊடுருவும் யானைகள் தென்னை மரங்கள் உட்பட பயன் தரும் மரங்கள் வீட்டுத் தோட்டங்கள், குடியிருப்புகள், வேலிகள் என்பவற்றை துவம்சம் செய்து வருகிறது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில், அக்கரைப்பற்று, சம்மாந்துறை, நிந்தவூர், அம்பாறை, இறக்காமம், மத்திய முகாம் ஆகிய இடங்களில் யானைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

குறித்த யானைகள் அங்குள்ள புதிய புல் இனங்களை உண்ணுவதுடன், பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் என 100 க்கும் அதிகமான யானைகள் அப்பகுதியில் உள்ள வயல் நிலங்களை நோக்கி வருகை தருகின்றன.

யானை – மனித மோதலை கட்டுப்படுத்துவதற்கு தமது திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக இந்த உயிரிழப்புகள் குறைந்துள்ளதாக வனவிலங்கு பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *