2025 ஏப்ரல் 15 ஆம் திகதி அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் பரவி வரும் ஒரு தவறான அறிக்கை குறித்து அரசாங்க தகவல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, தவறான அறிக்கையில் திணைக்களத்தின் லெட்டர்ஹெட் மோசடியாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறியது.
மேலும், ஏப்ரல் 15 ஆம் திகதியை அரசு விடுமுறையாக அறிவிப்பது குறித்து அரசாங்கம் எந்த உத்தியோகபூர்வ அறிக்கையையும் வெளியிடவில்லை எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவி வரும் ஆவணம் தவறானது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெளிவுபடுத்தியுள்ளது.
link: https://namathulk.com/