அதிவேக வீதிகளில் வங்கி அட்டைகளை பயன்படுத்தி கட்டணம்

Aarani Editor
0 Min Read
பிமல் ரத்நாயக்க

எதிர்வரும் மே மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து அதிவேக வீதிகளிலும், கட்டணங்களை டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தி செலுத்தலாம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

கொட்டாவை மற்றும் கடவத்தை வெளியேறும் இடங்களில் ஏற்கனவே ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளதாகவும், இந்த திட்டத்தை முழுமையாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்க ஒவ்வொரு கட்டணத்தையும் 8 செக்கனுக்குள் நிறைவு செய்வதே இலக்கு என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *