அமெரிக்காவில் கோப்பியின் விலை சடுதியாக அதிகரிப்பு

Aarani Editor
1 Min Read
கோப்பி

அமெரிக்காவில் கோப்பியின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கை காரணமாக ஏப்ரல் 5ஆம் திகதி முதல் கோப்பி இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு விதிக்கப்பட்ட வரிகள் , தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

கோப்பி இறக்குமதிக்காக ஆண்டுதோறும் அமெரிக்கா சுமார் 100 பில்லியன் அமெரிக்க டொலரை செலவிடுகின்றது.

இதில் அதிக அளவான கோப்பி பிரேசில் மற்றும் கொலம்பியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.

2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது அமெரிக்க சந்தையில் கோப்பியின் விலை சுமார் மூன்று டொலர் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அதேவேளை அமெரிக்க ஜனாதிபதி பல நாடுகள் மீது விதித்த வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், அமெரிக்க சந்தையில் அனைத்து நுகர்வோர் பொருட்களின் விலைகளும் ஏற்கனவே அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *