ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை: விளையாட்டு துறை அமைச்சர்.

Aarani Editor
1 Min Read
Sports Development

வவுனியா, ஓமந்தை விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்தி சர்வதேச தரத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் சுனில் குமார கமகே தெரிவித்துள்ளார்.

வவுனியா, ஓமந்தையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு அரங்குக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அமைச்சர் அதன் தேவைப்பாடுகள் மற்றும் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

அதன் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறினார்.

வடமாகாணத்தில் உள்ளக விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் மெய்வல்லுனர் பயிற்சிகள் என்பவற்றை எதிர்காலத்தில் வழங்கக் கூடியதாக இருக்கும் என அமைச்சர் தெரிவித்தார்.

விளையாட்டுத் துறையை வவுனியா மாவட்டத்தில் சிறப்பாக முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இளைஞர்களிடையே காணப்படுகின்ற தீய பழக்கவழக்கங்கள், மது பாவனை, தொலைபேசி பாவைனை, போதைப் பொருள் பாவனை என்பவற்றை கட்டுப்படுத்துவதற்கு விளையாட்டு துறை அவசியம் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.

அந்தவகையில் இந்த விளையாட்டு அரங்கை மேலும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் னவும் அமைச்சர் தெரிவித்தார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *