சகல சூரிய மின்சக்தி படலங்களையும் செயலிலிருந்து நீக்குமாறு மின்சார சபை கோரிக்கை!

Aarani Editor
1 Min Read
மின்சார சபை

மின் கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்காக நாளை (13) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கூரைகளில் பொருத்தப்பட்டிருக்கும் சூரியசக்தி படலங்களைப் பகல் நேரங்களில், மாலை 3:00 மணி வரை அணைக்குமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

அதற்கமைய, தங்கள் சூரிய படல அமைப்புகளைத் தாமாக முன்வந்து அணைக்குமாறு கூரை சூரிய மின்சக்தி படலங்களின் உரிமையாளர்கள் கோரப்பட்டுள்ளனர்.

நீண்ட விடுமுறைக் காலத்தில் தேசிய மின்சார தேவையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் அதிக சூரிய மின் உற்பத்தி காரணமாக, தேசிய மின்சாரக் கட்டமைப்பில் அழுத்தம் ஏற்பட்டுள்ளதால் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *