புத்தாண்டை முன்னிட்டு மூதூரில் திடீர் பரிசோதனை.

Aarani Editor
0 Min Read
Sudden Search

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மூதூர் சுகாதார பணிமனைக்குட்பட்ட தோப்பூர் பிரதேசத்தில் இன்று காலை திடீர் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது தோப்பூர் பிரதேசத்திலுள்ள தேனீர் கடைகள், வெதுப்பகங்கள், பலசரக்குக் கடைகள் பொது சுகாதார பரிசோதர்களினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

இதன் போது உணவுப் பாதுகாப்பை பேணாத, சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத, காலவதியான உணவுகளை வைத்திருந்த பல வர்த்தகர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மூதூர் சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கமைவாக மூதூர் சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதர் தலைமையிலான பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இவ் சுற்றிவளைப்பில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *