யாழில் துயர சம்பவம் : எறும்பு கடித்ததில் 21 நாளேயான சிசு உயிரிழப்பு.

Aarani Editor
1 Min Read
Child Death

எறும்பு கடித்ததன் காரணமாக கிருமி தொற்று ஏற்பட்டு உடற் கூறுகள் செயலிழந்து, பிறந்து இருபத்தியொரு நாளேயான பெண் சிசு ஒன்று உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த சிசு ஆலடி உடுவில் மானிப்பாயைச் சேர்ந்த தர்ஷினி குகராஜ் என்ற தம்பதிகளின் நான்காவது குழந்தையாகும்.

மேற்படி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 22 ஆம் திகதி மூன்றாம் மாதம் பெண் சிசு பிறந்துள்ளது.

இந்தநிலையில், நான்கு நாட்களுக்கு முன்னர் சிசுவுக்கு எறும்பு கடித்த நிலையில் அதனை அவர் கவனிக்காமல் விட்டதன் காரணமாக நேற்று அதிகாலை பால் குடித்த சிசு மயக்கமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது காலை 9.00 மணியளவில் சிசு உயிரிழந்துள்ளது.

இந்த மரணம் தொடர்பில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெபாலசிங்கம் விசாரணை மேற்கொண்டார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *