GSP+ வர்த்தக சலுகை மற்றும் அதன் நிபந்தனைகள் குறித்து ஆய்வு செய்ய, ஏப்ரல் மாத இறுதியில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஒரு குழு இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
GSP+ வர்த்தக சலுகை மற்றும் அதன் நிபந்தனைகள் குறித்து அரசாங்க பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் இந்தக் குழு கலந்துரையாடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது, 28% ஏற்றுமதிகள் ஐரோப்பிய ஒன்றிய சந்தைக்குச் செல்வதால், இலங்கையின் ஆடைத் துறையில் GSP+ சலுகை முக்கிய பங்கு வகிக்கிறது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.
எனவே, இலங்கை தொடர்ந்து GSP+ வர்த்தக சலுகையைப் பெறுவதை உறுதி செய்யும் நிபந்தனைகளுக்கு இணங்க அரசாங்கம் செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கேட்டுக்கொண்டார்.
link: https://namathulk.com/
