சித்திரை புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவைகள்

Aarani Editor
1 Min Read
PublicTransport

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

தேவைக்கேற்ப மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்தார்.

சிங்கள தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த இடங்களுக்கு பயணிக்கும் மக்களுக்காக இன்றும் விசேட ரயில் சேவைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இதற்கமைய பதுளை, பெலியத்தை, அனுராதபுரம், காலி மற்றும் காங்கேசன்துறை வரை மேலதிக ரயில் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்கு மேலதிகமாக யாழ் தேவி, ரஜரட்ட ரெஜின ரயில்களில் ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சித்திரை புத்தாண்டு பிறப்பையடுத்து பொதுமக்கள் அதிகளவில் கூடும் பகுதிகளில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *