இம்மாத இறுதிக்குள் A/L பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் – பரீட்சைகள் திணைக்களம்

Aarani Editor
0 Min Read
A/L

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிக்குள் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் சில நாட்களில் பெறுபேறுகள் தயாரிக்கப்பட்டு சரிபார்க்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.

இதேவேளை இம்முறை 253,390 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 79,795 தனியார் பரீட்சார்த்திகளும் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *