யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டப பராமரிப்பு தொடர்பில் இன்று (15) கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது திருவள்ளுவர் கலாசார மண்டபம் யாழ் மாநகர சபையால் முழுமையாக இயக்கப்பட்ட பின்னர் அதில் எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது தொடர்பாக இந்தியத் தூதரக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, வடக்கு மாகாண பிரதம செயலர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், இந்தியத் தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Link: https://namathulk.com/