வவுனியா – தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் நீராடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் நேற்று (14) மாலை இடம்பெற்றது.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
குறித்த இளைஞரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
எனினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சடலம் செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
link: https://namathulk.com/