அம்பாறை இறக்காமம் பிரதேசத்தில் 810 கிராம் ஜஸ் போதைபொருளுடன் வியாபாரி ஒருவரை நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினருடன் விசேட புலனாய்வு பிரிவினர் இணைந்து குறித்த போதைபொருள் வியாபாரியின் வீட்டை சம்பவதினமான நேற்று 11 மணியளவில் சுற்றிவளைத்து முற்றுகையிட்டு சோதனையிட்டனர்
இதன்போது வியாபாரத்துக்காக கொண்டுவந்த 810 கிராம் ஜஸ் போதைபொருளை மீட்டதுடன் 32 வயதுடைய வியாபாரியை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் நீண்டகாலமாக போதைபொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் கூறினர்.
Link: https://namathulk.com/