கடந்த 14 நாட்களில் வீதி விபத்துக்களில் சிக்கி 37 பேர் பலி

Aarani Editor
1 Min Read
Accident

கடந்த 14 நாட்களில் வீதி விபத்துக்களில் சிக்கி 37 பேர் உயிரிழந்தனர்.

குறித்த விபத்துக்களில் 99 பேர் படுகாயமடைந்ததாகவும், 335 பேர் சிறு காயங்களுக்கு உள்ளானதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதற்கிடையில், நேற்றையதினம் மற்றும் நேற்று முன்தினம் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 7 பேர் பலியாகினர்.

எல்பிட்டிய, எதிமலே, பிட்டிகல, மிஹிந்தலை, குருநாகல் மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் குறித்த விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, புதுவருட காலப்பகுதியில் இடம்பெற்ற விபத்துக்களில் காயமடைந்த 412 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவின் வைத்தியர் இந்திக ஜாகொட தெரிவித்துள்ளார்.

குறித்த காலப்பகுதியில் பட்டாசு விபத்துக்களால் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *