உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு தேவாலயங்களுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு.

Aarani Editor
0 Min Read
பொலிஸ்

உயிர்த்த ஞாயிறை முன்னிட்டு மத அனுஷ்டானங்களை நடத்தும் தேவாலயங்களுக்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை இலங்கை பொலிஸ் அறிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மத அனுஷ்டானங்கள் நடைபெறும்இ

எனவே, பக்தர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்பை செயல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.

இந்த காலகட்டத்தில் அதிக மக்கள் கூட்டம் இருக்கும் தேவாலயங்களை அடையாளம் கண்டு, அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பொலிசார், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

link: https://namathulk.com

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *