கிளிநொச்சியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Aarani Editor
1 Min Read
Drug

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து குறித்த கைது நடவக்கையில் ஈடுபட்டனர்.

இதன்போது புளியம்பொக்கனை பகுதியில் வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 85 Kgவுக்கும் அதிகமான கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய பளை பகுதியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியில் வீடு ஒன்றை வாடகைக்கு பெற்று கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *