“சிறி தலதா வழிபாடு” விசேட தலதா கண்காட்சிக்காக கடமையில் ஈடுபட்டுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு விசேட கொடுப்பனவு வழங்குவதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இன்று (18) முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரை கண்டி – ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தில் ‘சிறி தலதா வந்தனாவ’ விசேட நிகழ்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் அங்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பக்தர்களின் பாதுகாப்பிற்காக, பொலிஸார் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, இதில் பங்கேற்கும் அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் விசேட பயண செலவுகள் மற்றும் ஒருங்கிணைந்த கொடுப்பனவு ஒன்றை வழங்குவதற்கு, பதில் பொலிஸ்மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
இதன்படி, விசேட கடமைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் தமது பணியிடங்களுக்கு வெளியே 10 நாட்களுக்கு மேல் பகல் மற்றும் இரவு கடமைகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களுக்கு ஏற்படும் மேலதிக செலவுகளை கருத்தில் கொண்டு இந்த விசேட கொடுப்பனவை வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
