ஜனாதிபதிக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு

Aarani Editor
0 Min Read
முறைப்பாடு

தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மன்னாரில் வெளியிட்ட கருத்து தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இவ்வாறு ஆணைக்குழு கூடவுள்ளது.

மன்னாரில் நேற்று (17) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக வெளியிட்ட அறிக்கை, தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவில் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இந்தப் முறைப்பாடுகளை விசாரிப்பதற்காக ஆணைக்குழு எதிர்வரும் 21ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *