நுவரெலியாவிற்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நுவரெலியா மாநகரசபை ஏற்பாட்டில் இன்று (18) விக்டோரியா பூங்காவில் மலர் கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த மலர் கண்காட்சி இன்றும் (18) நாளையும் (19) நடைபெற உள்ளது.
இதில் சுற்றுலா பயணிகளை கவரும் பல வண்ண மலர் தொட்டிகள் பல்வேறு அலங்காரங்களிலும் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளையும் பார்வையளர்களையும் கவரும் வகையில் பறவைகள், செல்ல பிராணிகள் வடிவங்களில் அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/