அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர்.
மேலும் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான 6 பேர் படுகாயமடைந்தனர்.
துப்பாக்கிச்சூட்டை நடத்தியவர் 20 வயதான அதே பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மாணவன் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை சந்தேக நபரான குறித்த மாணவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் புளோரிடா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Link: https://namathulk.com/