இனவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி – புதிய சட்டங்கள் வகுக்கப்படும் என்கிறார் ஜனாதிபதி.

Aarani Editor
1 Min Read
ஜனாதிபதி

இனவாதத்தை தோற்கடிக்க தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்டங்கள் வகுக்கப்பட்டேனும் நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்படாது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை பகுதியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனை கூறினார்.

இதன்போது, கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை தாம் மதிப்பதாகவும், ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமான அரசியலில் ஈடுபடும் உரிமையை மதிப்பதாகவும் ஜனாதிபதி கூறினார்.

தற்போதைய அரசாங்கம் வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கு உள்ளிட்ட அனைத்து மக்களின் பங்களிப்புடன் உருவாக்கப்பட்டது எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

தற்போதைய தலைமுறையினருக்காக மீண்டும் ஒருபோதும் போரை நடத்தாத ஒரு நாட்டைக் கட்டியெழுப்ப பாடுபடுவோம் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *