மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்திய உலமா கட்சியின் தலைவர்.

Aarani Editor
1 Min Read
Easter Sunday Attack

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மினை இல‌ங்கை அர‌சு நாட்டுக்கு வ‌ர‌வ‌ழைத்து விசார‌ணை செய்ய வேண்டும் என உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ரும் ஸ்ரீல‌ங்கா ஐக்கிய‌ காங்கிர‌சின் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌ முபாற‌க் அப்துல் ம‌ஜீத் முப்தி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்துவ‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டித்துள்ள‌து எனவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகில‌ இல‌ங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவின் த‌லைமை என்ப‌து 2006ம் ஆண்டு முத‌ல் ஆயுட்கால‌ த‌லைமையாக‌ இருக்கும் விட‌ய‌த்தில் உல‌மா க‌ட்சி எப்போதும் எதிர்த்தே வ‌ருவதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அத‌ற்காக‌ ஈஸ்ட‌ர் தாக்குத‌ல் விட‌ய‌த்தில் அகில இலங்கை ஜ‌ம்மிய‌துல் உல‌மாவுக்கு ச‌ம்ப‌ந்த‌ம் இருப்ப‌தாக‌ வ‌ட‌ மாகாண‌ ச‌பையில் த‌மிழ் தேசிய‌ கூட்ட‌மைப்பின் உறுப்பின‌ராக‌ செய‌ற்ப‌ட்ட‌ அஸ்மின் என்ப‌வ‌ர் கூறியிருப்ப‌து முட்டாள்த‌ன‌மான‌ க‌ருத்து எனவும் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *