கொரிய மொழிப் பரீட்சைக்கான திகதி மாற்றம் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 6 ஆம், 7 ஆம் திகதிகளில் நடைபெறவிருந்த பரீட்சை முறையே மே மாதம் 10 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெறுமெனக் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், குறித்த பரீட்சைக்கான திகதிகள் மாற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/