கிளிநொச்சி அம்பாள்குளம் பகுதியில் பச்சிளம் பெண் சிசு ஒன்று டிப்பர் சில்லுக்குள் அகப்பட்டு உயிரிழந்துள்ளது.
நேற்று மாலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
அம்பாள்குளம் பகுதியில் வசிக்கும் இளம் தம்பதியினரின் ஒன்றரை வயதான ஒரேயொரு சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது .
வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பரை செலுத்த தயாராகிய போது, சிசு சில்லுக்குள் அகப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
