வடக்கு கிழக்கில் நாளை கொளுத்தி தீர்க்கும் வெயில் – சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை

Aarani Editor
1 Min Read
மழை

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை நாளைய தினம் (20) எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் வெப்பமான வானிலை நிலவக்கூடும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், பொலன்னறுவை, ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் நாளை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *