உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டம்.

Aarani Editor
1 Min Read
போராட்டம்

பெண்ணாகப் பிறந்தவரை மட்டுமே சட்டப்படி பெண்ணாகக் கருத முடியும், திருநங்கைகளை பெண்களாக கருத முடியாது என இங்கிலாந்தின் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அதே சமயம், பெண் பாகுபாடு சார்ந்த சட்டங்கள் திருநங்கைகளுக்குப் பொருந்தும் எனவும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இங்கிலாந்தில் போராட்டங்கள் நடைபெற்றது.

திருநங்கை உரிமைகளுக்கு ஆதரவாக சமூக ஆர்வலர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஓரின சேர்க்கையாளர்கள் அமைப்பினர், லண்டன், எடின்பர்க்கில் பேரணி நடத்தினர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

பேரணியின் போது லண்டனில் பாராளுமன்ற சதுக்கத்தில் உள்ள வாக்குரிமை பெற்ற மில்லி சென்ட் பாசெட் சிலை உட்பட 7 சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *