உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ் இயக்கமே என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
தனியார் தொலைக்காட்சி அலைவரிசையொன்றின் செய்திக்கான நேர்காணலின் போது அவர் இதனைத் கூறினார்.
ஜே.ஆர் காலம் தொட்டு மகிந்த காலம் வரை இந்நாட்டில் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அதுபோன்ற ஒரு சம்பவம் என முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக எனக்குத் தெரிந்த விடயங்களை தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தெரிவித்துள்ளதாகவும், அவற்றை வெளியிடுவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி ஐ.எஸ். இயக்கமேயாகும்.அமெரிக்காவின் சீ.ஐ.ஏ.உளவுப் பிரிவும் அதனை உறுதி செய்துள்ளதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.
Link: https://namathulk.com/
