போதையின் உச்சம் – வாள்வெட்டில் முடிந்தது : யாழ் உடுத்துறையில் சம்பவம்

Aarani Editor
1 Min Read
வாள்வெட்டு

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று(20) மாலை வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது

உடுத்துறை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் வீட்டிற்கு ஆழியவளையை சேர்ந்த ஒருவர் சென்று கலந்துரையாடிய போது அது வாக்குவாதமாக மாறியுள்ளது.

தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆழியவளையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் மதுபோதையில் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *