அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான முயற்சியே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஜனாதிபதி திட்டவட்டம்.

Aarani Editor
1 Min Read
உயிர்த்த ஞாயிறு

அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய துயரம் 2019 ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்ததாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

கடந்த ஐந்தரை ஆண்டுகளில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் உள்ள நோக்கம் உண்மையான சூத்திரதாரிகளை மறைப்பதே என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2019 இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கமும், அதைத் தொடர்ந்து வந்த அரசாங்கமும் உண்மையான குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள், தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதி செய்வதற்கு படிப்படியாக நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி கூறினார்.

அத்துடன்,2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்கழுவின் அறிக்கை, மேலதிக விசாரணைக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது.

ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில், ஜனாதிபதியின் செயலாளரால் இந்த அறிக்கை ஒப்படைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *