இந்திய அணியின் 2024 – 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தப் பட்டியலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை இன்று (21) வெளியிட்டுள்ளது.
குறித்த வருடாந்த ஒப்பந்தப் பட்டியலில் 34 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இதன்படி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் இந்த ஒப்பந்தத்தில் விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஏ ப்ளஸ் பிரிவில் பெயரிடப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஏ பிரிவில் மொஹமட் சிராஜ், கே.எல்.ராகுல், சுப்மன் கில், ஹர்திக் பாண்டியா, மொஹமட் ஷமி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
பீ பிரிவில் சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ், அக்ஷர் பட்டெல், யசஷ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரும், சீ பிரிவில் ரிங்கு சிங், திலக் வர்மா, ருதுராஜ் கெய்க்வாட், சிவம் துபே, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், முகேஷ் குமார், சஞ்சு சாம்சன், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ரஜட் பட்டிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரேல், நிதிஷ்குமார் ரெட்டி, இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, ஆகாஷ் தீப், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகிய 19 பேரும் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் மீண்டும் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர்.
Link: https://namathulk.com/