போப் பிரான்சிஸ் மறைவு – இந்தியாவில் 3 நாட்கள் துக்க தினம் அனுஸ்டிப்பு

Aarani Editor
1 Min Read
Pope Francis

மறைந்த பரிசுத்த பாப்பரசருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக 3 நாட்கள் துக்கம் அனுஸ்ரிக்கப்படும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்றையதினம் காலமானார்.

அவரது; உடல் ரெடெம்ப்போரிஸ் தேவாலயத்தில் வைக்கப்பட உள்ளது.

செயின்ட் பீட்டர்ஸில் தன் கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பவில்லை என்றும் ரோமில் உள்ள சான்டா மரியா மேகியார்வில் தனது கல்லறையை அமைக்க போப் பிரான்சிஸ் விரும்பியதாக கூறப்படுகிறது.

ரோமுக்கு செல்லும் போதெல்லாம் சான்டா மரியா மேகியார் பசிலிகாவுக்கு செல்வதை போப் வழக்கமாக வைத்திருந்தார்.

இதன்மூலம் 100 ஆண்டுகளுக்குப் பிறகு வத்திகானுக்கு வெளியே அடக்கம் செய்யப்பட உள்ள முதல் போப் இவர் ஆவார்.

இந்நிலையில்இ போப் பிரான்சிஸ் மறைவை ஒட்டி. 3 நாட்கள் துக்கம் அனுஸ்ரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் தேசிய கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *