கொழும்பில் கார்த்திகாவை கொலை செய்த கிருஷ்ணராஜாவிற்கு மரண தண்டனை

Aarani Editor
1 Min Read
Death Penalty

கொழும்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய கொலை சம்பவத்திற்கான தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் கைவிடப்பட்ட பயணப் பொதியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை , கொடூரமாக கொலை செய்த நபருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 11, செட்டித்தெருவில் உள்ள உள்ள விடுதியில் , தர்மராஜா கார்த்திகா என்பவர் 2015 ஆம் ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் பெற்றிக் கிருஷ்ணராஜா என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

வழக்கில் பிரதிவாதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபனமாகியுள்ளதால் அவருக்கு மரண தண்டனையை விதித்து , கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே இன்று தீர்ப்பளித்தார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *