ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் தோட்டபகுதியில் 74 வயது மூதாட்டி மீது 24 வயது இளைஞன் ஒருவர் பாலியல் தொல்லை விளைவித்தமை தொடர்பில் போடைஸ் பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்த பொலிசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து சம்பவம் தொடர்பாக ஆராய்ந்த பின்னர் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதற்கமைவாக, சந்தேகநபரை கைது செய்த பொலிசார், அவரை ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்நிலையில், குறித்த நபரை எதிர்வரும் மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹட்டன் நீதிமன்ற நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த 20 ஆம் திகதி குறித்த தோட்டபகுதியில் உள்ள இளைஞன் ஐஸ் போதைப்பொருள் பாவித்துவிட்டு, மூதாட்டியின் வீட்டு ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த, பாலியல் தொல்லைக்குட்படுத்தியதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட 74 வயது மூதாட்டி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
Link: https://namathulk.com/