உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில், மார்ச் 03 முதல் ஏப்ரல் 24 வரை, தேர்தல் தொடர்பாக 429 முறைப்பாடுகளை இலங்கை பொலிசார் பெற்றுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில், 61 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 222 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை.
இந்தக் காலகட்டத்தில், 25 வேட்பாளர்கள் மற்றும் 98 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் 23 வாகனங்கள் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதற்கிடையில், இன்று காலை 06.00 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், தேர்தல் தொடர்பாக 31 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதில், 03 தேர்தல் வன்முறை தொடர்பானவை மற்றும் 20 தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பானவை ஆகும்.
இக்காலக்கட்டத்தில், 02 வேட்பாளர்கள் மற்றும் 06 ஆதரவாளர்களைக் கைது செய்துள்ளனர்.
Link: https://namathulk.com/