நாட்டில் 120 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு – அரச மருந்தாளர்கள் சங்கம்.

Aarani Editor
0 Min Read
Medicine Shortage

நாட்டில் 120 வகையான மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

மருந்து உற்பத்தி தொடர்பான நிபுணத்துவம் கொண்ட தரப்பினரின் பற்றாக்குறையின் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் சுட்டிக்காட்டினார்.

எனினும் அவை தொடர்பில் கலந்துரையாடுவதற்கேனும் தற்போதைய சுகாதார அமைச்சர் தயாராக இல்லை என அரச மருந்தாளர்கள் சங்கத்தின் தலைவர் துஷார ரணதேவ குறிப்பிட்டுள்ளார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *