இலங்கையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தை இறப்புகளுக்கு பிரேத பரிசோதனை.

Aarani Editor
0 Min Read
பரிசோதனை

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் அனைத்து இறப்புகளும் இப்போது கட்டாய பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மரண விசாரணை அதிகாரிகளுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், குழந்தை இறப்பு பகுப்பாய்வை வலுப்படுத்துவதற்கான இலங்கையின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு முக்கிய பகுதியாகும் எனள அமைச்சு வலியுறுத்தியது.

இளம் குழந்தைகளிடையே இறப்புக்கான பொதுவான காரணங்களைக் கண்டறிந்து, அத்தகைய இறப்புகளைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என அமைச்சு சார் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Link: https://namathulk.com/

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *