சமூக ஊடகங்களில் சமீபத்தில் வெளியான தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரண்டு சந்தேக நபர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு பெண் தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பாதிக்கப்பட்டவரும் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் கிரிபத்கொடை பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிசார் கூறினர்.
தனியார் நிறுவன உரிமையாளர் ஒரு பெண் ஊழியருடன் காரில் பயணித்தபோது, அவரது காதலனும் மற்றொரு நபரும் வாகனத்தை வழிமறித்து அவரைத் தாக்கியதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் குறித்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/