2024 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைகளில் ஆண் பரீட்சார்த்திகளை விட பெண் பரீட்சார்த்திகள் அதிக எண்ணிக்கையானோர் பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.
தேர்வு எழுதிய அனைத்து பரீட்சார்த்திகளிலும் 64.73 சதவீதமானோர் பல்கலைக்கழக நுழைவுத் தகுதிகளைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையர் நாயகம் கூறினார்.
பெண் பரீட்சார்த்திகளில், 71.93 சதவீதமானோர் பல்கலைக்கழக அனுமதிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
அதே நேரத்தில் ஆண் பரீட்சார்த்திகளில் 60.24 சதவீதமானோர் பல்கலைக்கழக தகுதியைப் பெற்றுள்ளனர்.
மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்த மாணவர்களின் சதவீதத்திலும் இதேபோன்ற போக்கு காணப்படுவதாகவும், ஆண் பரீட்சார்த்திகளில் 13.87 சதவீதமானோரும், பெண் பரீட்சார்த்திகளில் 8.6 சதவீதமானோரும் மூன்று பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையர் நாயகம் மேலும் எடுத்துரைத்தார்.
Link: https://namathulk.com/