இன்று அழிக்கப்படவுள்ள 494 கிலோ ஹெரோயின்.

Aarani Editor
0 Min Read
Heroin

ஒரு தொகைப் போதைப்பொருட்கள் இன்று அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்திட்சகருமான புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கைப்பற்றப்பட்டு, வழக்கு விசாரணைகள் நிறைவுபெற்ற 494 கிலோ ஹெராயின் போதைப்பொருட்களே இன்றைய தினம் அழிக்கப்படவுள்ளன.

புத்தளம், பாலவி பகுதியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான எரியூட்டியில் குறித்த போதைப் பொருட்களை அழிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அழிக்கப்படவுள்ள போதைப்பொருட்கள் புத்தளம், பாலவி பகுதிக்கு கடுமையான பாதுகாப்பின் கீழ் கொண்டு செல்லப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *